அழகு தெய்வமாக வந்து
(காவடி சிந்து)
அழகு தெய்வமாக வந்து
பழனி மலை மீது நிற்கும்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழ்வே கருணை செய்குகன்
அரணுகந்த குருவாம் உயர் சீலன் - என்றும்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
சரணம்
குழந்தையாகக் குமாரனாகக்
கோவனாடைத் துறவியயாக,
கோலம் கொல்லும் காட்சி என்ன சொல்வேன் - கண்டு
கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன் - இந்த
குவலயத்திலோர் கலியுகப் பெரு
வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டென்றான் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்நீல மயில் மீதில் ஏறி
ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - உயர்
நித்திலப்-பொன் முறுவல் வள்ளி நேசன் - அவன்
நீள்நிலம்தனில் அன்பு செய்திடும்
அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்யஜோதி வடிவமாம் பிரகாசன் - தூரன்
நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்
வா வா முருகா வடிவேலழகா…