அழகு தெய்வமாக வந்து

(காவடி சிந்து)

அழகு தெய்வமாக வந்து
பழனி மலை மீது நிற்கும்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழ்வே கருணை செய்குகன்
அரணுகந்த குருவாம் உயர் சீலன் - என்றும்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

சரணம்

  1. குழந்தையாகக் குமாரனாகக்
    கோவனாடைத் துறவியயாக,
    கோலம் கொல்லும் காட்சி என்ன சொல்வேன் - கண்டு
    கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன் - இந்த
    குவலயத்திலோர் கலியுகப் பெரு
    வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
    கும்பிட்டென்றான் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
    குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்

  2. நீல மயில் மீதில் ஏறி
    ஆவினன்குடியில் தோன்றும்
    நிமலனாம் குழந்தை முருகேசன் - உயர்
    நித்திலப்-பொன் முறுவல் வள்ளி நேசன் - அவன்
    நீள்நிலம்தனில் அன்பு செய்திடும்
    அடியர் யாரையும் காத்து நின்றிடும்
    நித்யஜோதி வடிவமாம் பிரகாசன் - தூரன்
    நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்

வா வா முருகா வடிவேலழகா…

Lists: 4-jan-2026