சரணமப்பா சரணமய்யா

(மத்யம ஸ்ருதி)

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

  1. நெற்றியிலே நீரணிந்து நீலாடை தாங்கியே
    சுற்று வந்து ஐயன் பாதம் தேடினோம்
    சபரிமலை தன்னை நோக்கி ஓடினோம்

  2. பாவக்கடலைக் கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே
    தவக்கோலம் துளசிமாலை தாங்கினோம்
    தாரணியில் உன் புகழைப் பாடினோம்!!

  3. சரமெடுத்து தீர்த்தமாடி வேட்டையாடி கூட்டம் கூடி
    பேட்டையிலே துள்ளிவந்தோம் ஐயனே - எங்கள்
    பேரானந்தம் பேரானந்தம் ஸ்வாமியே!!

  4. இருமுடியும் தாங்கிக்கொண்டு பெருவழியைக் கடக்கையிலே
    கரிமலையில் கதறுகிறோம் ஐயனே - எம்மைக்
    காத்தருள வேண்டுகிறோம் மெய்யனே!!

  5. பாவனமாம் பம்பை தனில் பாலகனே உன்னைக்கண்டு
    பாட்டுப்பாட பாவவினை போகுதே
    பக்தியோடு கைகள் உனைக் கூப்புதே!!

  6. ஆறுவாரம் நோன்பிருந்து ஆறு மூன்று படியேறி
    ஆரவாரக் கூட்டத்திற்கு நடுவிலே - உன்னை
    ஆனந்தமாய் தரிசனமும் காண்போமே!!

Lists: 4-jan-2026