மாடு மேய்க்கும் கண்ணே
மாடு மேய்க்கும் கண்ணே - நீ
போக வேண்டாம் சொன்னேன்
காய்ச்சின பாலு தரேன்
கற்கண்டு சீனி தரேன்
கை நிறைய வெண்ணெய் தரேன்
வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும்…)
போகவேணும் தாயே - தடை
சொல்லாதே நீயே
காய்ச்சின பாலும் வேண்டாம்
கற்கண்டு சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து
ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும்…)
கோவர்த்தன கிரியில்
கோரமான மிருகங்கள் உண்டு
சிங்கம் புலி கரடி வந்தால்
கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும்…)
காட்டு மிருகமெல்லாம்
என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால்
வேட்டையாடி வென்றிடுவேன்
(போக வேணும்…)
யமுனா நதிக்கரையில்
எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால்
கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும்…)
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ?
கண்டதுண்டோ சொல்லும் அம்மா!
கள்வர் வந்து எனை அடித்தால்
கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும்…)
பாசமுள்ள நந்தகோபர்
பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா
ஏக்கமுடன் தேடிடுவார்
(மாடு மேய்க்கும்…)
பாலருடன் வீதியிலே
பந்தாடுறான் என்று சொல்லேன்
கண்ணே நீ குரல் கொடுத்தால்
ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேணும்…)