மாணிக்க வீணையேந்தும்
பல்லவி
மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேன்தமிழ்ச் சொல்லெடுத்துப் பாடவந்தோம் - அம்மா
பாடவந்தோம் - அம்மா பாடவந்தோம்
அனுபல்லவி
அருள்வாய் நீ
இசை தருவாய் நீ
இங்கு வருவாய் நீ
இலயம் தரும் வேணி - அம்மா
நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
(மாணிக்க…)
சரணம்
வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாள் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாள் - கள்ளம்
இல்லாமல் தொழும் அன்பர் என்பவர்க்கே - அள்ளி
அறிவைத் தரும் அன்னையும் நீயே
வாணி சரஸ்வதி மாதவி பார்கவி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க் கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி
(அருள்வாய் நீ….)