வினை தீர்க்கும் நாயகனே

வினை தீர்க்கும் நாயகனே - வணங்கி
துதிப்பேன் விநாயகனே
வித்வம் அளிப்பவனே விக்னம் அழிப்பவனே
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே

கஸ்துரி மஞ்சள் உமையாளின் கைபட்டு
உருப்பெற்று உயிர்பெற்று கணபதினாய்
உலகின் அதிபதியானாய்
நீயோர் தாய் காத்த தனயன்
உன் தலை கொய்த பரமன்
கஜராஜன் தலை வைத்த கஜபதியானாய்
உலகின் அதிபதியானாய்
உன்னை நாடும் பக்தருக்கு கர்ப்பக்கிரகம்
உள்ளே அமர்ந்துள்ள நீயே ஸ்வர்கம்
இப்பூஜைக்கு நீ அகரம்
உனக்கு தோப்புக்கரணம்
நான்போட நல்வாழ்வு அருளணும்

(வினை தீர்க்கும்)

வானாக மண்ணாக நீராக காற்றாக
நெருப்பாக உருவான கணநாயக
ப்ரணவ அருள்நாயகா
நீயோர் ஊனாக உணர்வாக உடலாக உயிராக
உறவோடு உறவான அருள்நாயகா
பஞ்சமுகநாயகா
பிறப்பேழில்லாரை நீ எடுத்துக்கொள்ளு
இப்பிறப்பில் தான் முக்தியை கொடுத் தருளு
உன் தும்பிக்கை என் அபயம்
என் வாழ்க்கை உன் உபயம்
நான் பாட நல்வாழ்வு அருளணும்

(வினை தீர்க்கும்)